Stock News: இந்திய பங்குச் சந்தையில் வீழ்ச்சி - ‘வரி வசூல்ராஜா’ ட்ரம்ப் தாக்கமா?
ட்ரம்ப் வரி விதிப்பு நடவடிக்கையின் எதிரொலியாக சர்வதேச அளவில் பங்கு வர்த்தகம் தடுமாற்றம் கண்டுள்ளது. இதன் தாக்கத்தால் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சி நிலவுகிறது.
ட்ரம்ப் வரி விதிப்பு நடவடிக்கையின் எதிரொலியாக சர்வதேச அளவில் பங்கு வர்த்தகம் தடுமாற்றம் கண்டுள்ளது. இதன் தாக்கத்தால் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சி நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (மார்ச் 28) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 144.66 புள்ளிகள் சரிந்து 77,461.77 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 38.7 புள்ளிகள் சரிந்து உயர்ந்து 23,553.25 ஆக இருந்தது.
அதன்பின், மென்மேலும் சரிவு நீடித்தது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பகல் 1 மணியளவில் சென்செக்ஸ் 293.86 புள்ளிகள் (0.38%) சரிந்து 77,834.97 ஆகவும், நிஃப்டி 89.05 புள்ளிகள் (0.38%) சரிந்து 23,502.90 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் என அனைத்திலும் பெரும் இறக்கம்தான் நிலவுகிறது. இந்தப் போக்கு இப்போது இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது.

குறிப்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசின் புதிய வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக, சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. வாகன இறக்குமதி மீதான வரி விதிப்பை அமெரிக்கா உயர்த்தியதன் எதிரொலியாக, வானக உற்பத்தி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை கண்டு வருகின்றன. இதுவே, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகளின் சரிவுக்கு முக்கியக் காரணம்.
ஏற்றம் காணும் பங்குகள்:
கோடக் மஹிந்திரா பேங்க்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
டாடா மோட்டார்ஸ்
நெஸ்லே இந்தியா
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஐசிஐசிஐ பேங்க்
ஐடிசி
பாரதி ஏர்டெல்
டெக் மஹிந்திரா
ஆக்சிஸ் பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
எஸ்பிஐ
ஏசியன் பெயின்ட்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
என்டிபிசி
அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்
டாடா ஸ்டீல்
பஜாஜ் ஃபைனான்ஸ்
டிசிஎஸ்
மாருதி சுசுகி
இன்ஃபோசிஸ்
விப்ரோ
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.85.54 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan