Stock News: மீட்சிக்கு இடையே ‘போக்கு’ காட்டும் இந்திய பங்குச் சந்தை!
இந்திய பங்குச் சந்தையில் மீட்சி ஏற்பட்டாலும், இடையிடையே ஏற்றமும் இறக்குமாக சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் போக்கு காட்டி வருகிறது.
இந்திய பங்குச் சந்தையில் மீட்சி ஏற்பட்டாலும், இடையிடையே ஏற்றமும் இறக்குமாக சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் போக்கு காட்டி வருகிறது. எனினும், பெரிய அளவில் சரிவை நோக்கி நகரும் சூழல் இல்லாதது நிம்மதி தருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (மார்ச் 6) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 578.36 புள்ளிகள் உயர்ந்து 74,308.59 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 154 புள்ளிகள் சரிந்து 22,491.30.ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று முதலே வர்த்தகம் மீண்டு வந்தாலும், இடையிடையில் தடுமாற்றம் நிலவுவது முதலீட்டாளர்களுக்கு ஒருவித அச்சத்தையும் குழப்பத்தையும் தந்துள்ளது.
இன்று முற்பகல் 11.50 மணியளவில் சென்செக்ஸ் 127.34 புள்ளிகள் (0.17%) உயர்ந்து 73,857.56 ஆகவும், நிஃப்டி 53.55 புள்ளிகள் (0.24%) உயர்ந்து 22,390.85 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியோ, ஹாங்காங், ஷாங்காய் மற்றும் சியோல் என அனைத்து பங்குச் சந்தைகளிலும் எழுச்சி காணப்படுகிறது. இத்துடன், உள்ளூர் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து மீட்சிப் போக்கு நிலவுகிறது. எனினும், இது தொடருமா என்ற குழப்பமும் முதலீட்டாளர்களிடம் நீடிக்கிறது.

ஏற்றம் காணும் பங்குகள்:
எல் அண்ட் டி
விப்ரோ
ஐசிஐசிஐ பேங்க்
இன்போசிஸ்
டாடா மோட்டாரஸ்
பாரதி ஏர்டெல்
மாருதி சுசுகி
ஐடிசி
கோடக் மஹிந்திரா பேங்க்
டெக் மஹிந்திரா
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஏசியன் பெயின்ட்ஸ்
டாடா ஸ்டீல்
ஆக்சிஸ் பேங்க்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
சன் பார்மா
எஸ்பிஐ
நெஸ்லே இந்தியா
டிசிஎஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா சரிந்து ரூ.87.11 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan