Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

27 சர்வதேச தமிழக தலைவர்களுடன் தமிழ்நாடு முதலிடம்: HSBC Hurun Global Indians List 2024!

ஹெச்எஸ்பிசி ஹரூன் குளோபல் இந்தியன்ஸ் 2024 பட்டியலில் இந்தமுறை அதிகப்படியான இடங்களை தமிழர்கள் பிடித்ததால், இந்தப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

27 சர்வதேச தமிழக தலைவர்களுடன் தமிழ்நாடு முதலிடம்: HSBC Hurun Global Indians List 2024!

Tuesday February 04, 2025 , 3 min Read

உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களின் தலைமையில் இருக்கும் இந்திய வம்சாவளித் தலைவர்களின் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு HSBC Hurun Global Indians 2024, வெளியிட்டது.

இந்தப் பட்டியலில் 200 நிறுவனங்களைச் சேர்ந்த 226 நபர்கள் இடம்பெற்றுள்ளனர், அவர்களின் ஒருங்கிணைந்த சொத்து மதிப்பு 10 டிரில்லியன் டாலராகும். இது உலகளாவிய பொருளாதார நிலப்பரப்பை வடிவமைப்பதில் இந்திய புலம்பெயர்ந்தோரின் முக்கியப் பங்கை பிரதிபலிக்கிறது.

இதில், மைக்ரோசாப்டின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்ய நாதெல்லா முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர், 3,146 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து ஆல்பாபெட் (கூகிள்) இன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் யூடியூப்பின் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் ஆகியோர் $2,107 பில்லியன் மற்றும் $455 பில்லியன் மதிப்புள்ள நிறுவனங்களைக் கொண்டுள்ளனர். மொத்தத்தில், முதல் 10 தலைவர்கள் பட்டியலின் மொத்த மதிப்பில் 73%-த்தை கொண்டுள்ளனர்.

sundar pichai

முதலிடத்தில் தமிழர்கள்

ஹெச் எஸ் பி சி ஹரூன் குளோபல் இந்தியன்ஸ் 2024 (HSBC Hurun Global Indians List 2024) பட்டியலில் இந்தமுறை அதிகப்படியான இடங்களைப் பிடித்து தமிழர்கள் முதலிடத்தில் உள்ளனர். 

இந்தப் பட்டியலில் இந்தாண்டு 27 தமிழர்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் அல்பபெட் சி இ ஓ (CEO of Alphabet) சுந்தர்பிச்சை முதலிடத்தில் உள்ளார். இதன்மூலம் இந்திய அளவிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி மீண்டும் தமிழர்களின் பெருமை நிலைநாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் தமிழகத்தைத் தொடர்ந்து பஞ்சாப் இரண்டாம் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் இருந்து 21 சர்வதேச தலைவர்கள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் லிண்டேயின் சி இ ஓ சஞ்சீவ் லம்பா முதலிடத்தில் உள்ளார்.

மூன்றாம் இடத்தில் 21 சர்வதேச தலைவர்களைத் தந்து, மகாராஷ்டிரா இடம் பிடித்துள்ளது. அவர்களில் வெர்டெக்ஸ் பார்மசிடிகல் ரேஷ்மா கேவர்ரமணி முதலிடத்தில் உள்ளார்.

நான்காம் இடத்தில் 17 சாதனையாளர்களுடன் குஜராத் உள்ளது. இதில், டிகே வங்கி பாரத் மஸ்ராணி முதலிடத்தைப் பிடித்துள்ளார். முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் டெல்லியும், கேரளாவும் உள்ளது. இங்கு தலா 16 சர்வதேச தலைவர்கள் உள்ளனர். ஆரிஸ்டா நெட்வொர்க் ஜெயஸ்ரீ உல்லால் மற்றும் கூகுள் க்ளௌட்டின் தாமஸ் குரியன் ஆகியோர் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

hsbc

புதிய உயரம் தொட்ட தலைவர்கள்

இந்த தரவரிசைப் பட்டியல் மேற்கூறிய நிறுவனங்களின் சந்தை மூலதனம் மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கான மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த தொலைநோக்குத் தலைவர்களை தரவரிசைப்படுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில், கூகிள் தேடல், யூடியூப் அல்லது மைக்ரோசாஃப்ட் குழுக்கள் போன்ற சேவைகள் மூலம் உலகளவில் 4 பில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்து, தொழில்களை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற தலைமை நிர்வாக அதிகாரிகள், நிர்வாக இயக்குநர்கள் மற்றும் நிறுவனர்கள் உள்ளனர்.

இப்படி, தொழில்நுட்பம், பொருளாதாரம், ஆரோக்கியம் உட்பட பல பிரிவுகளில், இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் தங்களிடமிருந்து சர்வதேச அளவில் முக்கிய பதவியில் இருக்கும் தலைவர்களைப் பெற்றிருப்பதன் மூலம் இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் பெருமையான இடத்தைப் பெற்றுள்ளது.

jayshree ullal

பெண் தலைவர்கள்

ஹெச் எஸ் பி சி ஹரூன் குளோபல் இந்தியன்ஸ் 2024 அறிக்கை, கல்வியின் பங்கையும் வலியுறுத்துகிறது, இந்த தலைவர்களில் 62% பேர் இந்தியாவில் படித்தவர்கள், அவர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் மதிப்புமிக்க இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (IIT) பட்டதாரிகள் ஆவர். முதல் தலைமுறை தொழில்முனைவோர்: இடம்பெற்றுள்ளவர்களில் பெரும்பாலோர் (57%) முதல் தலைமுறை தொழில்முனைவோர், மீதமுள்ளவர்கள் தொழில் வல்லுநர்கள் அல்லது வாரிசுதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் ஆண்கள் மட்டுமின்றி இந்திய வம்சாவளி பெண் தலைவர்களும் அதிக இடங்களைப் பெற்றுள்ளனர். அவர்களில் ஜெயஸ்ரீ உல்லால் தவிர்த்து, நேஹா நர்கேடே (கன்ஃப்ளூயன்ட்), அஞ்சலி சுட் (டூபி), யாமினி ரங்கன் (ஹப்ஸ்பாட்), மற்றும் லீனா நாயர் (சேனல்) ஆகியோர் பெண் தலைவர்களில் அடங்குவர். அவர்கள் கூட்டாக 436 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள நிறுவனங்களை மேற்பார்வையிட்டு நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.